பக்கங்கள்

17 டிசம்பர் 2010

படுகொலை உத்தரவுகளை சிங்கள அரச தலைமையே வழங்கியுள்ளது!

சரணடைந்த தமிழ் மக்களை கூட்டமாக படுகொலை செய்ததற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது என்பதையே பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இரண்டாவது காணொளி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு 15ம் திகதி அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளியில் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இழுத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கியுள்ளன.
அவர்களை படுகொலை செய்யும் இராணுவத்தினர் மகிழ்ச்சியாகவும், உறுதியுடனும் காணப்படுகின்றனர். எனவே இந்த படுகொலைக்கான உத்தரவுகள் மேலிடத்தில் இருந்தே சிறீலங்கா இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதை அனுமானிக்க முடிகின்றது.
தாம் தண்டிக்கப்படமாட்டோம் என்ற மன உறுதியுடன் அவர்கள் படுகொலையில் ஈடுபடுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. முதலாவது காணொளியை பார்த்தபோது, அதனை ஊடகவியலாளர் ஒருவர் இரகசியமாக படம் பிடித்ததாகவே நாம் கருதினோம். ஆனால் இரண்டாவது படத்தை பார்த்தபோதே தம்மை படம் எடுக்கிறார்கள் என தெரிந்தும் படையினர் படுகொலைகளில் ஈடுபடுவதை காணமுடிகின்றது என அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.