பக்கங்கள்

27 டிசம்பர் 2010

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர் படுகொலை!

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சிவலிங்கம் வயது 52 என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு தங்களின் முயற்சிகளை திசைதிருப்பும் புதிய உத்தியை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான முயற்சியிலேயே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.