பக்கங்கள்

28 டிசம்பர் 2010

மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே கொலைகள் இடம்பெறுகின்றன!

யாழ். குடாநாட்டு மக்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே தொடர் கொலைகளும், கொள்ளைகளும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று குற்றம் சாட்டினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,நாட்டில் சமாதானம், அமைதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அரசு இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் அகற்றுவதற்குப் பதிலாக அவற்றை தொடர்ந்து இயங்கச் செய்து தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் இதுபோன்ற அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விடுகின்றது.மதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் படுகொலை செய்யப்படுகின்றனர். யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரும், இராணுவத்துடன் இணைந்து செயற்படும் குழுவினருமே ஆயுதங்களை வைத்திருக்கின்றனர்.
இக்கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் இவர்களே பொறுப்புக்கூறவேண்டும். 1995ஆம் ஆண்டு முதல் யாழ். குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.