பக்கங்கள்

07 டிசம்பர் 2010

தீவக போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

யாழ் குடாநாட்டில் அண்மை நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பண்ணை வீதியூடான போக்குவரத்துச் சேவைகளை இ.போ.சபை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று நண்பகலுடன் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் நண்பகல் நிறுத்தப்பட்டது முதல் தீவக மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட துரித முயற்சி காரணமாக இந்த வீதி திறக்கப்பட்டதையடுத்து தீவகத்திற்கான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
இதேவேளை நேற்று மாவட்டத்தில் மழை பெய்யாமையும் இதற்கு சாதகமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.