பக்கங்கள்

18 டிசம்பர் 2010

கருணாநிதியின் அரவணைப்பில் இருந்த கருணா!பரபரப்பு தகவல்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா இலங்கை அரசின் உதவியுடன் பிரிந்து சென்று இலங்கை அரசினதும் இந்திய,தமிழக அரசின் ஆதரவுடனும் தமிழகத்தில் 2004 ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டுவரை தங்கியிருந்ததாக இலங்கை தொடர்பான பல இரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழீழ தேசிய விடுதலைப் போரை காட்டிக்கொடுத்து செத்த பிணமாக இருந்துவரும் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற போது இலங்கையில் இருப்பதற்கு பாதுகாப்பு இல்லையென்பதை உணர்ந்த இலங்கை இந்திய புலனாய்வு அதிகாரிகள் அவரை தமிழகத்தில் மேல் குறிப்பிட்ட இரு ஆண்டுகளாகவும் தங்கவைத்திருந்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிதைக்க வேண்டும் என்று இலங்கை அரசை விட அதிகமாக ஆசைப்பட்ட கருணாநிதி அவர்கள் இதை செய்துள்ளார் என்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.