பக்கங்கள்

17 டிசம்பர் 2010

ஆனைக்கோட்டையில் வீடொன்றினுள் புகுந்து கொள்ளை!

ஆனைக்கோட்டையிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த சுமார் ரூ.மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.மானிப்பாய் வீதியில் ஆறுகால்மடச் சந்தியில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 10க்கும் மேற்பட்ட திருடர்கள் கதவினைத் திறக்கும்படி வீட்டுக்காரர்களை மிரட்டிப் பின்னர் கதவின்மேல் காணப்பட்ட கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
இதனால் பயமுற்ற வீட்டுக்காரர் கதவினைத் திறக்க உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரர் அனைவரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சிறுமி ஒருவரைத் தூக்கிச் சென்று நகைகள் இருக்கும் இடத்தினைக் காட்டும்படி மிரட்டியுள்ளனர். இதற்காக வீட்டின் அனைத்துப் பொருட்களையும் உடைத்தும் தூக்கியும் எறிந்துள்ளனர்.
பின்னர் அறையிலிருந்த ரூ. 3 இலட்சத்துக்கு மேற்பட்ட நகைகளையும் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டில் கொள்ளையிடப்பட்டவேளை நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததனால் அக்கம் பக்கம் யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கே.கே.எஸ். வீதியில் இருக்கும் வீடு ஒன்றிற்கு வானில் வந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரர்களை கதவினைத் திறக்கும்படி மிரட்டியுள்ளனர். அவர்கள் உடனே அருகிலுள்ள பேராசிரியர் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருடர்கள் வந்து இருப்பதாகத் தகவல் கூறினர்.பேராசிரியர் பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல் வழங்கி மீண்டும் இவர்களுக்குத் தகவல் வழங்க தொலைபேசியை அழைத்த வேளை வீட்டுக்காரர் உசாராகி விட்டதை உணர்ந்த கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதனை விட்டு விட்டுச் சென்று விட்ட னர்.
இப்படியான அடுத்தடுத்த கொள்ளை நடவடிக்கைகளினால் யாழ்ப்பாண மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.