பக்கங்கள்

12 டிசம்பர் 2010

மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

மக்கள் விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடமேறிய இந்த அரசாங்கம், மக்களின் அடிமடியில் கை வைத்து தமது அடியாட்களை போஷித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோற்கடிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அவசியமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் வி;க்ரமசிங்க முதல் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் வரையில் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வளங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும், விரைவில் வெற்றிப் பாதையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியே மக்களின் வெற்றி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் பிழையான தீர்மானங்களுக்கு கட்சியை நேசிப்பவர்கள் தலையாட்ட மாட்டார்கள் எனவும், பிழைகளைச் சுட்டிக்காட்டி ஒட்டு மொத்த கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதே தமது எண்ணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.