பக்கங்கள்

04 டிசம்பர் 2010

மகிந்தவிற்கு பிடியாணை பிறப்பிக்ககோரி போராட்டம்.

போர்க்குற்றவாளியான மகிந்த ராசபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரியும், அவரையும் அவரின் சகாக்களையும் கைது செய்து தமிழ் மக்களுக்கு நீதிவழங்க வேண்டும் என கோரியும் சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் நேற்று பிற்பகல் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் மனு ஒன்றையும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
மனுவை பகீரதன் தர்ஜிகா பிரித்தானிய அதிகாரிகளிடம் கையளித்தார்.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தோழர் தியாகு, உரையாற்றுகையில் மேற்குலக நாடுகளில் தமிழ் மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
ஹிட்லரின் கொடுமைகளுக்கு எதிராக யூதர்கள் ஒற்றுமையோடு போராட்டம் நடத்தியதைப்போல தமிழர்களும் ஹிட்லர் செய்த படுகொலையை விட மோசமான இனப்படுகொலையைச் செய்த மகிந்த ராசபக்சவிற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுவிஸ் தமிழரவையைச் சேர்ந்த நிரோஜனும் அங்கு உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.