பக்கங்கள்

03 டிசம்பர் 2010

தனி விமானத்தில் தப்பிக்க முயலும் படைத்தளபதி.

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாகி கலகே தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் சிறப்பு படையணியின் அல்பா, டெல்ரா, பீற்றா ஆகிய கொம்பனி படையணிகளே படுகொலை செய்திருந்தன.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் பிரதம பங்கு வகித்தவர்களில் கலகேயும் முக்கியமானவர்.
இதனிடையே, மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் பேச்சுச் சுதந்திரம் பேணப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சில சமயங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகிந்தா ராஜபக்சா தனிப்பட்ட பயணமாக பிரித்தானியா வந்தபோதும், அவருடன் முக்கிய படை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏன் வந்தனர் என்பது பெரும் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.