பக்கங்கள்

31 டிசம்பர் 2010

உரும்பிராயில் கடத்தப்பட்டவர் தொடர்பாக மனைவி முறைப்பாடு!

உரும்பிராய் பகுதியில் நேற்றுக் கடத்தப்பட்ட நபர் ஒரு தனியார் கல்விநிலைய ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
30 வயமுடைய சண்முகநாதன் விக்கினேஸ்வரன் என அவரது மனைவி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். திருமணமாகி ஒரு கிழமையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் இணுவிலில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்ததாகவும் அங்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் மனைவியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரிகன் செருப்பு உள்ளிட்ட பொருட்களை பார்த்து விக்கினேஸ்வரனின் மனைவி தனது கணவரே இவர் என இன்று
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.