பக்கங்கள்

18 டிசம்பர் 2010

ஐ.நா.நிபுணர் குழுவை அனுமதிக்க முடியாதென்கிறார் விமல் வீரவன்ஸ.

ஐக்கிய நாடுகளின் நிபுணாகள் குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்தால் அதற்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர்கள் குழு எந்த வகையிலும் இலங்கைக்குள் பிரவேசிப்பதனை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிபுணர்கள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அணி திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கலைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அமைச்சர் விமல் வீரவன்ச சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.