பக்கங்கள்

09 டிசம்பர் 2010

கரன்னாகொட லண்டன் தூதராக நியமனம்: நிராகரித்தது பிரிட்டன்.

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை அரசாங்கத்தின் உயர் மட்ட விருப்பின் பேரில் இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதராக நியமித்த போதும், அதனை பிரிட்டன் ஏற்க மறுத்துள்ளதாக அறிய முடிகின்றது.இலங்கையில் புலிகளுடனான அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பரவலாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னுமோர் பாரிய அடியாக விழுந்துள்ளது.
இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலத்தில் வசந்த கரன்னாகொடவே கடற்படைக்குத் தலைமை தாங்கியிருந்தார். அதன் காரணமாகவே அவரும் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிட்டன் அரசாங்கம் அவரது நியமனத்தை நிராகரித்துள்ளது.
பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற்ற விடயம் தொடர்பாக கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை தூதுவராக ஏற்றுக் கொள்வது வேண்டாத தலைவலியை உருவாக்கி விடும் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுவதாக தெரிகின்றது.
ஆயினும் வசந்த கரன்னாகொடவின் நியமனத்தை நிராகரித்துள்ள செயலால் இலங்கை அரசாங்கம் பிரிட்டன் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.