பக்கங்கள்

04 டிசம்பர் 2015

நடராஜா வித்தியாலய மாணவியை பலியெடுத்தது கடற்படை!


வேலணை பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். 
காலை 8.00 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் நாரந்தனையை சேர்ந்த உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்து வரும் போது மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.