பக்கங்கள்

13 ஜூன் 2015

யாழ்,நீதிமன்ற தாக்குதலில் ஈபிடிபி?

யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபியின் முக்கிய கைகள் இருந்தமை தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு காவல்துறைக்கே இத்தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.அவ்வகையில் ஈபிடிபி வசமுள்ள வேலணைப்பிரதேச சபையின் தலைவரான போல் என்றழைக்கப்படும் சி.சிவராசா உள்ளிட்ட வேறு சில கட்சியின் உறுப்பினர்களிடம் மேற்படி வன்முறைச் சம்வங்களின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டக்ளஸின் வலது கையும் முன்னாள் யாழ்.மாநகர துணை முதல்வாரன றீகனையும் தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைதாகியுள்ள விஜயகாந்த் மற்றும் செந்தூரன் இருவரும் இத்தகைய பின்னணியினை கொண்டுள்ளனர். இதனிடையேகைது நடவடிக்கைகளை அடுத்து வன்முறைச்சம்பவங்களில் தொடர்புபட்டனரென அடையாளம் காணப்பட்ட பலர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.