பக்கங்கள்

19 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் மற்றுமொரு நாடக அரங்கேற்றம்!

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் விடுத்திருக்கும் பரிந்துரை தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு கண்துடைப்பு நாடகமாகவே நோக்கப்பட வேண்டியிருக்கிறது.சிறு சிறு குற்றச் செயல்களுக்கே நீதியை எதிர்பார்க்க முடியாத சிறிலங்காவில் மாபெரும் இன அழிப்பு ஒன்றுக்கு அந்த இன அழிப்பில் ஈடுபட்டவர்களும் இணைந்து நடத்தும் விசாரணை எப்படி தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.சர்வதேச நீதிபதிகளுடன் சிங்கள அரச சார்பிலும் நீதிபதிகள் நியமிக்கப்படும் பட்சத்தில் அது ஒரு குழப்பமான நீதிமன்றமாக இருக்குமே தவிர நீதிக்கான ஒரு மன்றமாக அமையப்போவதில்லை என்பதே வெளிப்படையான உண்மை.ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகள் உலக நாடுகளோ ஐ.நா.மன்றமோ அறியாததல்ல.இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்ப்பது இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொண்டு தமிழர் தேசத்தை அங்கீகரித்து அவர்களையும் உள்வாங்கி இணைந்து செயற்பட உலக நாடுகளும் ஐ.நா.மன்றமும் முன்வர வேண்டும்.சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை உள் நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பகற் கனவாகவே இருக்கும்.
இந்த கலப்பு நீதிமன்றம் ஒரு கண்துடைப்பு நாடகமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.