பக்கங்கள்

27 அக்டோபர் 2015

கருணையே இல்லாத சிங்களப் படைகளுக்கு கருணைச்சபை!

கருணையே இல்லாத தமது படைகளுக்கு கருணைச்சபை அமைக்கிறதாம் சிறீலங்கா அரசு.சிறீலங்கா மட்டுமல்ல ஆசிய நாடுகளுடன் கூட்டிணைந்து வல்லாதிக்க நாடுகளும் தமிழர்களுக்கு அநீதியே இளைத்து வருகின்றன.சாதாரண கல்வியறிவே அற்ற ஒருவனுக்கே நீதி என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும்போது இந்த உலக அரசுகளுக்கு மட்டும் ஏன் புரியாமல் இருக்கிறது.உள்ளக பொறிமுறை மூலம் தாமே விசாரணையை மேற்கொள்வோம் என்று கூறும் சிறீலங்கா அரசு படையினரை பாதுகாப்போம் என்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ,கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரை காப்பாற்றி விட்டோம் என்றும் பகிரங்கமாகவே தம்பட்டம் அடிக்கிறது.அப்படியானால் இந்த விசாரணைப் பொறிமுறை எதற்காக?இது வெறும் ஏமாற்று வேலை என்பது தமிழ் மக்களுக்கு புரிகிறது.ஆனால் தமிழர் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்திருப்போருக்கு பதவி மட்டுமே தெரிகிறது.இவர்களுக்கு எல்லாம் வாக்களித்து நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்த்தியது தமிழர்களின் சாபக்கேடு.தமிழர்கள் அனுபவித்த கொடூரங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற துன்பங்கள் கண்டு எவனுக்குமே கருணை வரவில்லை,ஆனால் மாபாதகர்கள் மீது மட்டும் கருணை வருகிறது.
எங்கே செல்லும் இந்தப்பாதை இதை யார்தான் யார்தான் அறிவாரோ?

-இது நீதி வேண்டும் ஒரு தமிழனின் ஆதங்கம்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.