பக்கங்கள்

16 ஆகஸ்ட் 2015

மாவையும் சிறீகாந்தாவும் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்!

நேற்று இரவு மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் மீது நடாத்தப்பட்ட திட்டமிட்ட குண்டுத்தாக்குதலின் பின்னணி வெளியாகியுள்ளது. முற்று முழுதாக திட்டமிட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரே இந்தத் தாக்குதல்ளை நடாத்தியுள்ளனர். குருநகர் தண்ணீர்த் தாங்கிப் பகுதியில் உள்ள ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட டைனமற் வெடி மருந்ததைப் பயன்படுத்தியே இத் தாக்குதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிகாந்தாவின் ஆதரவாளரான நிசாந்தன் என்பவரின் வழிகாட்டலில் நடாத்தியுள்ளது தெரியவந்துள்ளது. குருநகர் தண்ணீர்த்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த டைனமற் பாவித்து மீன் பிடித்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரான டேவிட் ஜேம்சன் என்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தாவால் பிணையில் எடுக்கப்பட்டிருந்தான். அவனைப் பாவித்து டைனமற் வெடி மருந்தைப் பெற்றே அவனது துணையுடன் கூட்டமைப்பினர் தமக்கு அனுதாபம் பெறுவதற்காக இத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதற்காக குறித்த டேவிட்ஜேம்சனுக்க 50 ஆயிரம் ரூபா கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இத் தகவல்களை சிறீக்காந்தாவுடன் நெருக்கிச் செயற்படும் இருவர் எமது செய்திச் சேவைக்கு உறுதிப் படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளதால் பீதியடைந்துள்ள கூட்டமைப்பினரும் தமிழரசுக் கட்சியினரும் தமக்கான அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறான தில்லாலங்கடி வேலையைச் செய்துள்ளனர் . மாவை சேனாதிராஜாவின் திருகுதாளங்கள் மக்களுக்குத் தெரியவந்ததையிட்டு மாவையின் அனுசரனையுடனேயே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வழமையாக அதிகாலையிலேயே வரும் உதயன் பத்திரிகை இன்னும் வரவில்லை. எல்லாம் திட்டமிட்டது போல் செய்திகளை வெளியிடச் செய்து வருவதற்கான ஆயத்தமே இது.உண்மையில் தாக்குதல்களை நடாத்துபவர்கள் வெறுமனவே வீதியில் குண்டைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்து அனுதாப அலையை உருவாக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கம் தெரிந்த விடயம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள், தேர்தலில் பின்னர் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அறிந்து சரியான முறையில் பாடம் புகட்டுவதற்கான ஆயத்தங்கள் தமிழ்த்தேசியத்தில் பற்றுக் கொண்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வயது போன நேரத்திலும் மக்களே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பிச்சை கேட்கும் இந்த மாவையின் நடவடிக்கைகளை தமிழ்மக்களாகிய நீங்கள் உணராது விடில் எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து அடிமையாகவே நடாத்தப்படுவீர்கள்.இங்கேயுள்ள காணொலியை பார்த்தால் விளங்கும் ஏன் குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.