பக்கங்கள்

05 ஜூன் 2015

புளியங்கூடல் அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

புளியங்கூடல் ஊர்காவற்றுறை செருத்தனைப்பதியில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12ம்(12.06.2015)திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற அம்பாளின் அனுக்கிரகம் கூடியுள்ளது.(27.06.2015)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(28.06.2015)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும்,18ம் திருவிழாவாகிய திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.இதேவேளை"எனை ஆளும் என் அன்னை"எனும் ஒலிப்பேழை வெளியிடப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் ஒலிப்பேழைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.