பக்கங்கள்

26 செப்டம்பர் 2015

தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம்!

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை
ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்டினண்ட் கேர்ணல் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 12 நாள்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.