பக்கங்கள்

25 ஜூலை 2015

நீங்கள் என்ன சொன்னாலும் சனம் நம்பாது என்றாராம் சிறீதரன்!

வவுனியாவில் சிறிதரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தால் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையான விடுதலைப் புலிப் போராளிகள் என்றால் முள்ளிவாய்க்காலில் செத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்னாள் புலிப் போராளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இவ்வாறு தான் பேசவில்லை என சிறிதரன் கூறிவருகின்றார். சிறிதரன் வவுனியாவில் புலிகளைப் பற்றி கூறிய வேளையில் அங்கு இருந்த ஏனைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஊடாக சிறிதரன் கூறியது உண்மை என்பதை அறிந்த சிறிதரனின் விசுவாசியான ஒருவர் இது தொடர்பாக சிறிதரனிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு சிறிதரன் இவ்வாறு பதில் சொன்னாராம் ”அண்ணை நான் கதைக்கும் போது என்னோட இருந்தவங்களைப் பற்றியோ அல்லது என்னோட இருந்தவங்கள் சொல்லுறதைக் கேட்டுவிட்டு என்னோட கதைக்கிறவங்களைப் பற்றியோ நான் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் நீங்கள் என்னத்தைதான் சொன்னாலும் சனம் நம்பாது என்று எனக்குத் தெரியும். அவங்கள் (முன்னாள் போராளிகள்) அந்தக் கூட்டத்துக்குள்ள வந்து நின்று குழப்பியடிப்பாங்கள். மற்றவங்கள் போல நானும் பார்த்துக் கொண்டு நிக்குறதோ? ” இவ்வாறு சிறிதரன் சொன்னாராம். கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் வெறும் பத்தாயிரம் வாக்குகளுடன் வந்த சிறிதரன் அதுவும் புலிகளின் தளபதி தீபனின் மச்சான் (தங்கையின் கணவர்) என்ற போர்வையில் வந்த புலித்தோல் போர்த்தி நரி இவ்வாறு கூறியதைக் கேட்டு மிகவும் கோபத்துடன் எழுந்து வந்துள்ளார் சிறிதரின் விசுவாசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.