பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2015

தேவியனை அரசபடைகளுக்கு காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபா பெற்றார்!

தேவியன் 
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் அவர்களை ஆயுத ரீதியாக பலப்படுத்தவும் முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்த தேவியன் மற்றும் அப்பன் போன்றவர்களை சிறீதரன் அரச புலானாய்வுப் பிரிவிடம் காட்டிக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த பின் மகிந்தராஜபக்சவிடம் இருந்து 4 கோடி ரூபா பெற்றதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது, 2010ம் ஆண்டு கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வந்த சிறீதரன் 2012ம் ஆண்டு வரை கடும் தேசியம் பேசி வந்துள்ளார். இவரை எவ்வாறு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என மகிந்தவும் மகிந்தவின் புலனாய்வுப் பிரிவினரும் பெரும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்த வேளை சிறீதரனின் பாலியல் பலவீனம் பற்றிய தகவல்களை துல்லியமாகப் பெற்றனர். தனது அலுவலகத்திற்குள் தனது அந்தரங்க உதவியாளரான வேளமாளிதனை நியமித்து, அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் ஏழைகளான யுவதிகளையும் இளம் பெண்களையும் ஆசை வார்த்தைகள் மற்றும் வேலை வாய்ப்பு, பண உதவி என்பன தருவதாக வேளமாகிதனுாடாக பேரம் பேசி அவர்களை தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துவது அரச புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்தது. இதன் பின்னர் சிறீதரனது அலுவலகத்தைச் சுற்றிவளைத்த பொலிசார் வேளமாகிதனை ஆண்உறைகளுடன் பிடித்தது. அத்துடன் சிறீதரன் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பாலியல் மாத்திரைகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து வேளமாகிதனை விசாரித்த பாதுகாப்புத் துறையினர் வேளமாகிதனின் வாயால் சிறீதரனின் அனைத்து பாலியல் செயற்பாடுகளையும் கண்டு பிடித்தனர். இந்தப் பின்னணியை வெளியிடப் போவதாக சிறீதரனை அச்சுறுத்த தொடங்கவே சிறீதரன் மகிந்தவிடம் சரணடைந்ததாகத் தெரியவருகின்றது. 2012ம் ஆண்டு இறுதிப் பகுதிக்குப் பின்னர் சிறீதரன் அரசாங்கத்தை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக அமைதியாக இருந்தால் தவறு எனத் தெரிந்து டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே குறை கூறி வந்தார். இந் நிலையில் சிறீதரனிடம் தேசியப் பற்று நினைப்பதாக கருதிய சில புலி உறுப்பினர்கள் தாங்கள் தொடங்க உள்ள ஆயுதப் போராட்டம் பற்றி தெரிவித்ததாகவும் இதனையடுத்து சிறீதரன் உசாரடைந்ததாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவியன் உட்பட்ட புலிகள் இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடப் போவது தொடர்பாக மகிந்தவின் தம்பியான கோத்தாவிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளார் சிறீதரன். அதன் பின்னர் தேவியன் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது போல் காட்டிக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவகள் யார் எங்கிருந்து உதவி்கள் வருகின்றன, புலம்பெயர் தமிழர்களின் பின்னணி இருக்கின்றதா? என சகலவற்றையும் அறிந்த படையினருக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் சிறீதரன். தேவியன் குழுவினர் ஆயுதப் போராட்டத்தை தொடங்க ஆயத்தமான வேளை சிறீதரன் சரியான தருனத்தில் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து தேவியனின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு இருந்த தேவியன் உட்பட்டவர்கள் தப்பி ஓடினர். இதனால் அரசாங்கத்தரப்பு சிக்கலில் இருந்தது, இருந்தும் சிறீதரனின் காட்டிக் கொடுப்பு தெரியாத தேவியன் மீண்டும் சிறீதரனைத் தொடர்பு எடுத்த போது சிறீதரன் அவர்களைக் குறித்த இடத்திற்கு வருமாறு கூறி அரச படையினரிடம் மாட்ட வைத்ததாக சிறீதரனுடன் நெருங்கிய நண்பர்களின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டீலுக்காக மகிந்த தரப்பு சிறீதரனுக்கு 4 கோடி ரூபாக்களைக் கொடுத்ததாகவும் அதனை வைத்து சிறீதரன் கிளிநொச்சி உட்பட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மற்றும் காணிகளைக் கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர், இதே வேளை சிறிதரன் புலிகளில் இருந்து தப்பி ஓடியவர்களையும் புலிகளையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்களையும் தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு தனது தம்பி சிறிகுகனின் இணையத்தளங்களான லங்காசிறி, தமிழ்வின் , ஜேவிபி ஆகியவற்றைப் பயன்படுத்தி விசமப் பிரச்சாரங்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது, வெகு விரைவில் சிறீதரனின் பாலியல் லீலைகள் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இங்கு வெளியிடுவதற்கு முற்பட்டுள்ளோம். இவர் செய்த லீலைகளை இவரது அலுவலகத்திற்குச் சென்ற பெண் தெரிவிக்க முன்வந்துள்ளார். விரைவில் அவற்றை வெளியிடவுள்ளோம்.
இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.