பக்கங்கள்

11 ஆகஸ்ட் 2015

கொள்கையின் சின்னமாக உந்து ஊர்தி!

புளியங்கூடல் 
எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் பாராளுமன்றத்திகான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் வடக்கு கிழக்கு பகுதிகளில் களைகட்டியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில்தான் இம்முறை பெரும் போட்டி நிலவுகிறது.கூட்டமைப்பின் முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்களும் தேர்தல் நேர பொய் வாக்குறுதிகளும் இனிமேலும் தமிழ் மக்களிடத்தில் எடுபடப்போவதில்லை என்றும் இம்முறை கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்திப்பது உறுதி என்றும் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் தேசியக்கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரியவருகிறது.கொள்கையின் சின்னமான  உந்து ஊர்திக்கே வாக்களிக்க உள்ளதாக இளையோர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்து பரிமாறி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.