பக்கங்கள்

20 ஜூன் 2015

கம்(Hamm)காமாட்சி அம்பாள் நாளை இரதோற்சவம்!

ஜெர்மனியின் கம்(Hamm)மாநகரில் கோவில் கொண்டருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேர்த்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(21.06.2015)நடைபெற உள்ளது.பகல் 12மணிக்கு அம்பாள் தேரேறி புறப்படுவாள்.இவ்வாலயத்தின் தேர் உற்சவத்தை காண ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர்.அத்துடன் பிற மதத்தை சார்ந்தவர்களும் குறிப்பாக வெள்ளையின மக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்து வருகிறார்கள்.அத்துடன் ஜெர்மானிய பாடப்புத்தகங்களிலும் கம் காமாட்சி அம்பாள் ஆலயம் இந்துக்களின் அடையாளமாக குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.