பக்கங்கள்

14 மே 2015

புங்குடுதீவில் பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை புங்குடுதீவினில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படடுள்ளார். நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.