பக்கங்கள்

06 ஜூலை 2015

ஸ்ரீலங்காவின் மூத்த படையதிகாரி திடீர் மரணம்!

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார். நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே, மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக மரணமானதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர் சிறிலங்கா இராணுவத்தில் முக்கியமான பல பதவிகளை வகித்திருந்தவர் என்பதுடன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய வந்தார். இவரது பொறுப்பின் கீழேயே முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.புலிகளின் முக்கிய தளபதிகளாக விளங்கிய பாப்பா,லோறன்ஸ் உட்பட 60வரையிலான போராளிகள் மைத்திரி ஜனாதிபதியானதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் ஏற்பட்டுள்ள உள்ளகப்பிரச்சனைகளால்
இந்த படையதிகாரிக்கு மரணம் நேர்ந்திருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.