பக்கங்கள்

11 ஆகஸ்ட் 2014

போர்க்குற்றவாளி நடத்தி வைத்த மரணச்சடங்கு!

சிறீலங்கா படையில் இணைந்த தமிழ்யுவதியின் சகோதரனின் இறுதிக் கிரிகைகள் போர்க்குற்றவாளிகளால் நடத்தப்பட்டுள்ளது.முல்லைத்தீவில் படையில் பணியாற்றிய தமிழ்யுவதியின் ஒரு வயதான சகோதரனின் இறுதிச் சடங்கு முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜா் ஜெனரல் ஜெகத் டயஷினால் நடத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தமிழ் படையினளின்  இறுதிச் சகோதரன் கடும் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முந்தினம் உயிரிழந்தான். இந்த மரணச்சடங்கு முல்லைத்தீவு படைத் தளபதியின் பொறுப்பில் அவா்களது முழுச் செலவிலும் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இன அழிப்பாளன் ஜெகத் டயஷினால் குறித்த குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.