பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2014

ஐ.நா.வின் விசாரணை தொடங்கியது – தமிழிலும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம்!

un subஈழப்போரின் இறுதியாண்டுகளில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளடங்கலான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் ஆரம்பித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 21.02.2002 முதல் சிறீலங்கா அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் செயற்பாடுகளை முன்னெடுத்த 15.11.2011 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் தொடங்கியுள்ளது. இதற்கான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:oisl_submissions@ohchr.org முறைப்பாடுகள் அனைத்தும் ஆகக்கூடியது 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் காணொளிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் இவற்றை மின்னஞ்சல் வழியாக அனுப்பாது முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் சகல முறைப்பாடுகளும் 30.10.2014 நள்ளிரவிற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.தமிழீழ தேசத்திற்கு எதிராக சிங்களம் முன்னெடுத்து வரும் இனவழிப்பு யுத்தத்தில் தமது உறவினர்களை இழந்தவர்கள் மட்டுமன்றி, உடல் அவயங்களை இழந்தவர்கள், கைதுகளுக்கு ஆளானவர்கள், வதைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள், வதைமுகாம்களில் துன்புறுத்தப்பட்டவர்கள், வான்வழித் தாக்குல்கள், எறிகணை வீச்சுக்களில் உடமைகளை இழந்தவர்கள், இருப்பிடங்களை நிரந்தரமாக இழந்தவர்கள், சம்பவங்களை நேரில் கண்ணுற்ற சாட்சிகள், ஊடகவியலாளர்கள் – மனித உரிமை செயற்பாட்டாளர்களாகக் கடமையாற்றியவர்கள் என சகல தரப்பினரும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.