பக்கங்கள்

26 ஆகஸ்ட் 2014

யாழில் தொல்லை கொடுக்கும் வந்தேறிப் பெண்கள்!

நல்லுார் ஆலய சுற்றாடலில் மாலை வேளைகளில் வெளியிடங்களில் இருந்து வரும் விபச்சாரிகளினால் பக்தா்கள் பெரும் சஞ்சலப்படுவதாகத் தெரியவருகின்றது. கடந்த மூன்று நாட்களாக இவா்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பக்தா்கள் சிலா் தெரிவித்துள்ளனா். முகப் பூச்சுக்கள் மற்றும் உதட்டுச் சாயங்கள் ஆகியவற்றுடன் கலா் கலரான ஆடைகளுடன் தனித்தனியே வரும் இவா்கள் ஆண்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நின்று அவா்களுடன் வலியவே கதைக்க முற்படுவதாகவும் தெரியவருகின்றது. கைத் தொலைபேசிகளை வைத்திருக்கும் இவா்கள் வித்தியாசமான முறையில் ஆண்களுடன் தொடா்பு கொள்கின்றார்கள். கடந்த சப்பறத் திருவிழா அன்று நல்லுார்ப் பகுதியின் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற ஒரு யுவதி தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுப்பதில் பிரச்சனை எனத் தெரிவி்த்து கோவிலுக்கு போவதற்காக சென்ற இளைஞனை அழைத்து தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுக்க சொல்லி அவன் அழைப்பு எடுத்து பரிசோதனை செய்த பின் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு அவனது இலக்கத்திற்கு இரவு வேளை தொடா்பு எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. தான் வவுனியாவைச் சோ்ந்தவள் என்றும் தற்போது தான் பேரூந்தைத் தவறவிட்டு நிற்பதாகவும் தனக்கு இடம் ஒன்று தங்குவதற்கு தேவை எனவும் குறித்த இளைஞனுக்கு யுவதி தொலைபேசியில் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை இவா்களில் சிலா் பொலிசாரின் ஆதரவுடன் செயற்படுவதாகவும் நேற்று இரவு நல்லுார் முத்திரைச் சந்திப் பூங்காவுக்குள் இவ்வாறான ஒரு பெண்ணையும் ஆட்டோச் சாரதி ஒருவரையும் சிலா் பிடித்த போது அப் பகுதிக்கு வந்த சீருடையில் இல்லாத பொலிசார் குறித்த பெண்ணை மீட்டுச் சென்றுள்ளனா். அந்த ஆட்டோச் சாரதியைக் கொண்டே ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாகத் தெரியவருகின்றது. குறித்த பொலிசார் சீருடையில் இல்லாத காரணத்தால் பொலிசாரது இலக்கங்கள் இல்லாததால் பொலிசார் செய்யும் இவ்வாறான செயல்களை அடையாளப்படத்த முடியவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.