பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2014

தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது!

யாழ்.மறை மாவட்டமும் யாழ். மாவட்ட தமிழ்ச் சங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமைத்த வண.தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலை அவரது நினைவு தினமான நேற்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதானவீதி, மடத்தடி சந்தியில் குறித்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபியை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள்,டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள்,அருட்தந்தையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.