தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அநாகரிகமாக விமர்சித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகமே கொந்தளிக்கிறது. ஆனால் பாரதிய ஜனதாவின் பொதுச்செயலர் ராம் மாதவோ, இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபாய ராஜபக்சேவை நேற்று சந்தித்து 'இருதரப்பு நல்லுறவு' குறித்து பேசியுள்ளார். இலங்கை பாதுகாப்பு துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு திமுக, தேமுதிக, பாமக, இடதுசாரிகள், மதிமுக என ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே கடும் கண்டனம் தெரிவித்தன.தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன. இப்படி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவ், அதே இலங்கை பாதுகாப்பு துறையின் செயலர் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த தகவலையும் இலங்கையின் பாதுகாப்பு துறை இணையதளம்தான் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்புதுறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராம் மாதவ், கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அண்மையில்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
05 ஆகஸ்ட் 2014
தமிழகத்தை கண்டுகொள்ளாது கோத்தாவுடன் பாஜக நல்லுறவு!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அநாகரிகமாக விமர்சித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகமே கொந்தளிக்கிறது. ஆனால் பாரதிய ஜனதாவின் பொதுச்செயலர் ராம் மாதவோ, இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபாய ராஜபக்சேவை நேற்று சந்தித்து 'இருதரப்பு நல்லுறவு' குறித்து பேசியுள்ளார். இலங்கை பாதுகாப்பு துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு திமுக, தேமுதிக, பாமக, இடதுசாரிகள், மதிமுக என ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே கடும் கண்டனம் தெரிவித்தன.தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன. இப்படி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவ், அதே இலங்கை பாதுகாப்பு துறையின் செயலர் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த தகவலையும் இலங்கையின் பாதுகாப்பு துறை இணையதளம்தான் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்புதுறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராம் மாதவ், கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அண்மையில்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.