பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2014

மூன்று தமிழர்களின் பெயரை நீக்கியது சிறீலங்கா!

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று, பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய 424 பேரின் பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம், கடந்த மார்ச் 20ம் நாள் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில், இருந்து, துரை எனப்படும் கருணாநிதி துரைரத்தினம், சுதர்சன் கைலாயநாதன், தனுஸ்கோடி பிறேமினி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இவர்கள், மூவரும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் துரைரத்தினம் பிரான்சில் வசிக்கிறார். கைலாயநாதன் இந்தியாவிலும், தனுஸ்கோடி பிறேமினி சிறிலங்காவிலும் வசிக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்போர், தமது பெயர்களை நீக்கக் கோரி தகுதி வாய்ந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், அதுகுறித்து ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையிலேயே, இந்த மூவரினதும் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.என்று குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.