பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2014

புலிக்குட்டிகளைக் காப்பாற்றினாா் ஐங்கரநேசன்!

இலங்கை தென்பகுதி காடுகளில் காணப்படும் அரியவகை புள்ளி இன சிறுத்தைக்குட்டிகள் இரண்டு வடக்குமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரால் மீட்கப்பட்டு இலங்கை வன இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வடக்குமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதியில் சிறுத்தைக்குட்டிகள் இரண்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அதனை பார்வையிடுவதற்காக அங்கு சென்றபோது, சிறுத்தைக்குட்டிகளை வைத்திருந்தவர்கள் தாம் எம்மால் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய நிலையில் அவற்றினை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டு சிறுத்தைக்குட்டிகளையும் மீட்ட நாம், இது தொடர்பில் அனுராதபுரம் மற்றும் கொழும்பில் உள்ள வன இலாக திணைக்களத்தினரிடம் அறிவித்திருந்தோம். இந்நிலையில் அனுராதபுரத்திலிருந்து இன்று யாழ்ப்பாணம் வந்த கால்நடை வைத்திய அதிகாரி சந்தனஜெயசிங்க தலைமையிலான குழுவினரிடம் இரண்டு குட்டிகளையும் கையளித்தோம். நாம் கையளித்த சிறுத்தைக் குட்டிகளை குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்புக் கண்காணிப்பில் வைத்திருந்த பின்னர் அவை வாழக்கூடிய இயற்கையான சூழலில் அவற்றினை விட்டுவிடுவதாக தமக்கு குறித்த குழுவினர் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.