பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2014

ஊர்காவற்றுறையில் ஆயுத வேட்டையில் சிறீலங்கா படைகள்!

ஊர்காவற்றுறையில் மெலிஞ்சிமுனை ஐயனார் ஆலயப் பகுதியில் தரைப்படையினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என தெரிய வருகிறது.ஐயனார் கோயிலுக்கு அருகில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று நேற்றுக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சிறீலங்காவின் தரைப்படை பாதுகாப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் கடற்படையினரும்,தரைப்படையினரும் இணைந்து ஆயுதங்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.