பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2014

நல்லூர் முருகனுக்கு இனி ஹெலி பூ தூவாதாம்!

நல்லூர் கந்தனுக்கு இம்முறை உலங்கு வானூர்தியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்யும் முறை நிறுத்தப் பட்டுள்ளது என ஆலயத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா அன்று யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உலங்கு வானூர்தியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வது வழக்கம். எனினும் இவ்வாறான செயற்பாட்டினால் பக்தர்களின் மனங்களில் கவனக்குறைவு ஏற்படும் எனவே அதனை விரும்பாத ஆலயத்தினர் இம்முறையும், எதிர்வரும் காலங்களிலும் உலங்கு வானூர்தியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வதனை நிறுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுடன் ஆலயத்தினர் பேச்சுக்களை நடாத்தி குறித்த முடிவினை எடுத்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.