கடந்த மாதம் சுவிஸ் நாட்டில் இருந்து குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த நபா் ஒருவா் தனது மனைவியி்ன் தங்கையுடன் தலைமறைவானார். தீவகப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பத்தில் மனைவி தற்போது தனது கணவனையும் தங்கையையும் தேடி வருவதாகத் தெரியவருகின்று.
தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது.
இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன் தங்கையுடன் கொழும்புப் பகுதியில் தங்கியுள்ளதாகவும் அவருக்கு தொலைபேசியில் மனைவி எடுக்கும் போது மனைவியின் தங்கையே கதைத்து வருவதாகவும் தாங்கள் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் தன்னை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என மனைவியின் தங்கை கேட்டுள்ளதாகவும் மனைவியின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா் என செய்தியொன்று தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.