பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2014

காரைநகர் சிறுமிகளுக்காக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு!

காரைநகரில் இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதையும் மற்றும் தமிழர் தாயகத்தில் பெண்கள் , சிறுமிகள் மீது சிங்கள ராணுவத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறையை கண்டித்தும் யேர்மனி , தலைநகரில்கவனயீர்ப்பு நிகழ்வு . காரைநகர் ஊரிப்பகுதியில் கடற்படையினரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் கடந்த 66 ஆண்டுகளின் வழமையான நீதி அற்ற சிங்கள பேரினவாத அரசின் நடமுறையின் தொடர்ச்சியில் முடக்க நிலையினை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. சிங்கள இன அழிப்பு அரசின் கொடூரப்பிடியில் தவிக்கும் தமிழ் பெண்கள் நிலை கடந்த ஆண்டுகளாக மனிதநேயமற்ற நிலமையில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது . இது போன்றே 2008.08.14 ஆம் திகதி அதிகாலை ஏனைய பள்ளி மாணவர்கள் உட்பட செஞ்சோலையில் முதலுதவி பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் , மொத்தமாக 61 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.எண்ணற்ற கனவுகளுன் பரீட்சைக்காகக் காத்திருந்த இம் இன மொட்டுக்களை கிள்ளி எறிந்து எரித்த சிங்கள இனவெறி அரசு இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை அடையாளம் காட்டியது. பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால் பெற்றோரை இழந்து அன்பு பாசம் அரவணைப்பு பாதுகாப்பு அனைத்தையும் பறிகொடுத்து அநாதரவாக தத்தளித்து நின்ற இந்தக் குழந்தைகளுடைய சோகத்தை தேவையை உணர்ந்து அவர்களது துயரைத்துடைத்து தனது பிள்ளைகளாக அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்தற்காக தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவாகி செயலில் கண்ட அமைப்பு தான் செஞ்சோலை. இவ்வாறு சிங்கள இனவாத அரசின் விமானப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட செஞ்சோலையில் முதலுதவி பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகளுக்குமான 8ஆம் ஆண்டு நினைவாக காரநகரில் இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதையும் மற்றும் தமிழர் தாயகத்தில் பெண்கள் , சிறுமிகள் மீது சிங்கள ராணுவத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும்பாலியல் வன்முறையை கண்டித்தும் யேர்மனி , தலைநகரில் கவனயீர்ப்பு நிகழ்வு .

கவனயீர்ப்பு நிகழ்வு:
14.08.2014 19 மணிக்கு 
Brandenburger Tor Pariser Platz 
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.