பக்கங்கள்

21 ஆகஸ்ட் 2014

முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது தாக்குதல்!

முற்போக்கு தேசிய தமிழ் கட்சியின் செயலாளர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். காயங்களுக்கு உள்ளான இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நல்லூர் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொது மக்கள் பலரும் பார்த்திருக்க இவர் தாக்கப்பட்டுள்ளார். இவரை தாக்கியவர்கள் பற்றிய விவரங்கள் எவையும் தெரியவரவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.