பக்கங்கள்

11 அக்டோபர் 2012

கனடா தமிழ் திரைப்பட விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

newsகனடா, ரொறண்டோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கனடா கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து கனடாவில் செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழீழ ஈகர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில், கனடா நாட்டில் ரொறண்டோ நகரில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்களாகிய நாம் கட்டாயம் புறக்கணிப்போம். தமிழர்களுக்கான களியாட்ட காலம் ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்கள் தான் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எல்லாம் இழந்து அனாதையாக்கப்பட்ட மே மாதம். மற்றும் எங்களின் மானம் காக்க, தம் உயிரை இழந்த மாவீரர்களை நினைவு கூறும் கார்த்திகை மாதம் தவிர்ந்த மாதங்களிலேயே களியாட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டுகிறோம். எனவே அடுத்தமாதம் நடைபெறும் தமிழ் திரைப்படவிழாவை நாம் புறக்கணித்தாக வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.