பக்கங்கள்

28 அக்டோபர் 2012

கனடாவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது!

கனடாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுவித்திருக்கிறது. இதுவரை சேத விவரம் எதுவும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.