பக்கங்கள்

18 அக்டோபர் 2012

கடற்படையினர் மாதகலிலிருந்து 20ஆம் திகதி வெளியேறுவர்: மு.சந்திரகுமார்

மாதகல் மேற்கு பிரதேசத்தில் அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் புதன்கிழமை தெரிவித்தார். குறித்த பகுதியை எதிர்வரும் 20ஆம் திகதி கடற்படையினரிடமிருந்து விடுவிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 250 குடும்பங்கள் இரண்டு வாரங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பிரதேசங்களுக்கான ஏனைய உட்கட்டுமாணம் மற்றும் வீதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அந்த பிரதேசங்களுக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டு தேவைகள் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் குறிப்பிட்டார். அத்துடன் மாதகல் மேற்கில் வசித்த வந்த மக்கள் சொந்த வீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக் மாதகல் மேற்கு மக்கள் சார்பாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.