பக்கங்கள்

21 அக்டோபர் 2012

ஜனநாயக மக்கள் முன்னணியின் பதவி நிலைகள் மற்றும் புதிய நிர்வாகிகள்.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில் புதிய பதவிகளுக்கான தெரிவுகளும், நடப்பு பதவி நிலைகளும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன. அதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய மட்ட நிர்வாகிகளாக பின்வருவோர் கடமையாற்றுவார்கள். தலைவர் மற்றும் பொதுசெயலாளர் மனோ கணேசன், பிரதி தலைவர் நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன், தவிசாளர் பி. ஜெயபாலன், உப தலைவர் முரளி ரகுநாதன், உப தவிசாளர் முரளி வேலாயுதன், நிதி செயலாளர் கே. கணேசன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, உதவி பொது செயலாளர் எஸ். குகவரதன், ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா, பிரச்சார செயலாளர் கே.டி. குருசாமி, தலைமையக செயலாளர் லோரன்ஸ் பெர்னாண்டோ, உதவி நிர்வாக செயலாளர் வேலு குமார், உதவி பிரச்சார செயலாளர் ஏ. கே. ராஜ்குமார், உதவி தலைமையக செயலாளர் எம். நாகலிங்கம் ராஜா, சமூக நலவுரிமை விவகார குழு தலைவர் ஜெரோம் விக்னேஸ்வரன்-உப தலைவர் பிரதீப் ராஜகுமாரன், வாக்குரிமை விவகார குழு தலைவர் த. மனோகரன், கல்வி விவகார குழு தலைவர் லயன் எஸ்.மனோகரன்-உப தலைவி எஸ். மஞ்சுளா, மகளிர் விவகார குழு தலைவி நந்தினி விஜயரத்தினம், இளைஞர் விவகார குழு தலைவர் எம். நவாஸ், கலாச்சார விவகார குழு தலைவர் கே. செந்தில்குமார், இடர் நிவாரண குழு தலைவர் வேலணை வேணியன்-உப தலைவர் எஸ். பாஸ்கரா.
-ஜனநாயக மக்கள் முன்னணி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.