பக்கங்கள்

14 அக்டோபர் 2012

யேர்மனியில் நடைபெற்ற அகதிகள் உரிமைக்கான மாபெரும் போராட்டம்.

யேர்மனியில் மற்றும் ஏனைய நாடுகளில் தமது உயிர்களை பாதுகாக்க அகதி தஞ்சம் கோரும் வெளிநாட்டவர்களை மனிதநேயத்துடன் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி யேர்மன் தலைநகரத்தில் மாபெரும் கண்டனப் பேரணி நேற்று (13-10-12)சனிக்கிழமை நடைபெற்றது . இப் பேரணியில் யேர்மன் தழுவி பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யேர்மன் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகள் கலந்துகொண்டனர்.இப் பேரணியில் கலந்து கொண்ட அகதிகள் கடந்த நாட்களாக Wurzburg நகரத்தில் இருந்து 600 KM தூரத்தை கடந்து Berlin நோக்கி தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் . பலத்த பாதுகாப்பு மத்தியில் இப் பேரணி நடைபெற்றாலும் ,இப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு ஒரு சில யேர்மன் இனவெறியர்கள் தாக்க முயற்சித்த சம்பவங்கள் நடந்தது . யேர்மனியில் கடந்த காலங்களில் அகதிகள் மிக மோசமாக கையாளப்படுவதாலும் அத்தோடு சில அகதிகள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் காரணமாகவே இப் பேரணி மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . இப் பேரணியில் கலந்துகொண்ட அகதிகள் தம்மை யேர்மன் அரசு நாடுகடத்த வேண்டாம் என்றும் தமது நாடுகளில் அரசாங்கத்தால் மற்றும் வேறு காரணங்களால் உயிராபத்து இருப்பதால் அகதிதஞ்சம் தருமாறும் வலியுறுத்தினர் . பல்லின மனிதவுரிமை அமைப்புகள் கலந்துகொண்ட இப் பேரணியில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் கலந்துகொண்டு ஈழத்தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுத்தது .

நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.