பக்கங்கள்

16 அக்டோபர் 2012

அடிதடியில் இறங்கினார் விஜயகலா மகேஸ்வரன்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் வர்த்தக நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை சதாம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள விமானசேவை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து அதன் உரிமையாளரை இந்த குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் வர்த்தக நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12.00 கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதன் உரிமையாளரான இ.சுரேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வானில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா தலைமையில் சிவில் உடையில் வந்தவர்களே நிறுவன உரிமையாளரை கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமையும் வடமாகாண ஆளுளர் சந்திரசிறியின் செயலாளரான மேஜர் சுனில் ஜயக்கொடி தலைமையிலான பத்து பேர் கொண்ட இரர்ணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்து நிறுவனத்தினை சேதப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது வர்த்தக நிலையமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோதும் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். தாம் அந்த கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்று அதனை நடத்திவரும் போது அதனை அச்சுறுத்தி அபகரிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா முயல்வதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டிய ஒருவர் இவ்வாறு இராணுவத்தினருடன் இணைந்து மாபியா கும்பல்போல் செயற்பட்டு வருவது தொடர்பில் தரப்பினர் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இல்லாது போனால் மனித உரிமை ஆணைக்குழுவை நாடப்போவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.