பக்கங்கள்

21 அக்டோபர் 2012

வடமாகாணசபையின் அரச முதலமைச்சர் வேட்பாளர் கே.பியாம்?

அடுத்த வருடம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனை ஆளுங்கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக தற்போதிருந்தே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு கே.பிக்கு கிளிநொச்சியிலுள்ள தமிழ்ச்செல்வனின் வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. தமிழ்ச் செல்வனின் இந்த வீட்டிலிருந்தே கே.பி தனது வடமாகாண அரசியல் மற்றும் வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முனெடுக்கவுள்ளார் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.