பக்கங்கள்

03 அக்டோபர் 2012

அறங்காவலர் சிவஞானச்செல்வம் அவர்கள் காலமானார்!

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய் அன்று காலமானார்.
ஆலய ஸ்தாபக குடும்ப வழித்தோன்றலும்,அறங்காவலர் சபை தலைவருமான சிவஞானச்செல்வம் அவர்கள் சமயத்தொண்டையும் சமூகத்தொண்டையும் ஒருங்கே வழிநடத்தி சென்ற ஓர் அற்புத மனிதர்.
மாணவர்களுக்கான அறிவூட்டல் செயற்பாடுகளுக்கு ஆலய கட்டமைப்பு மூலம் பெரும் உதவி நல்கி வந்தவர்.அன்னதான சபையை நிறுவி அதன் மூலமாக ஏழை மக்களின் பசி போக்கி வந்தவர்.ஆலய திருவிழா காலங்களில் 
பொது அறிவுப்போட்டிகளை நடாத்தி திருவிழா முடிவு நாளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கெளரவித்து வந்தவர்.
பிரபல வில்லிசை வித்தகர்களான சின்னமணி,சதாசிவம்,உடப்பூர் சோமாஸ்கந்தன் உட்பட பலரின் வில்லிசை நிகழ்வுகள் ஆலயத்தில் இடம்பெற காரணகர்த்தாவாக இருந்தவர்.முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் கா.பொ.இரத்தினம் வரை பல அரசியல் தலைவர்களாலும்,தமிழகத்திலிருந்து ஆலய திருவிழா காலங்களில் வருகை புரியும் பல கல்விமான்களாலும் உலகிலேயே மிகவும் சிறந்த அறங்காவலர் என பாராட்டப்பெற்றவர்.அன்னாரது இழப்பானது முழுத் தமிழ்கூறு நல்லுலகிற்குமே பாரிய இழப்பாகும்.அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருடனும் மக்களுடனும் புளியங்கூடல்.கொம்மும் கதி கலங்கி நிற்கின்றது!
அன்னாருக்கு தலை வணங்கி அஞ்சலிக்கின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.