பக்கங்கள்

27 அக்டோபர் 2012

முஸ்லிம்களின் மத்ரஸா அநுராதபுரத்தில் தீக்கிரை!

அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மத்ரஸா ஒன்று இன்று அதிகாலை எரிச்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்றே இதனைச் செய்ததாகத் தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்கள். முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த மதரசா எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது. இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையில் இயங்கி வந்த மேற்படி கற்கை நிலையம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.