பக்கங்கள்

07 அக்டோபர் 2012

ஒற்றுமையை ஓங்கவைக்க கனடியத் தமிழ்ச் சமூகத்துடனான அமீரின் சந்திப்பு!

தற்போது ஆதிபகவன் திரைப்பட இசை வெளியீட்டிற்காக  கனடா வந்துள்ள இயக்குனரும், தமிழ்ப் பற்றாளரும், ஈழத் தமிழர்களிற்காக சிறை சென்றவருமான அமீர் சுல்தான் அவர்கள், கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினர், தமிழார்வ அமைப்புக்கள் மற்றும் தமிழ் ஊடகத்துறை சார்ந்தவர்களை சந்தித்துப் பேசும் நிகழ்வு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1 மணிக்கு ரொறன்ரோவில் ஏற்பாடு செய்துள்ளார். குறுகிய கால ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இச் சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே ஒற்றுமைக்கான தேவை குறித்த கருத்துப் பகிர்வுகளை இயக்குனர் அமீர் மேற்கொள்ளவுள்ளார். ஸ்காபரோ நகரில் இலக்கம் 3840 பிஞ்ச் வீதி கிழக்கில் அமைந்துள்ள மெற்றோபொலிரன் சந்திப்பில் இன்று மாலை 1 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு ஏற்பாடகியுள்ளது.
இந்தச் சந்திப்புப் பற்றிய மேலதிக விபரங்கள் வேண்டியவர்கள் 905 903 7227 அல்லது 416 500 4545 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.