பக்கங்கள்

18 அக்டோபர் 2012

கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை.

தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தினர் கையெழுத்து, உங்கள் உறவினர் - அயலவர் - நண்பர்களின் கையெழுத்துகள் மட்டுமன்றி, இன மதங்களுக்கு அப்பாற்பட்டதாக உங்களுக்கு அறிமுகமான, உங்களுடன் பணிபுரிகின்ற ஒவ்வொருவரின் கையெழுத்தையும் இதற்காகப் பெறுங்கள் என்று உங்களை உரிமையுடன் கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகின்றது.

ஒன்று பத்தாகி; பத்துகள் நூறாகி; நூறுகள் ஆயிரமாகி ஆயிரங்கள் லட்சங்களாகி ஒரு கோடியாக எட்டட்டும்! !
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை தொலைபேசி: 416-830-7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.