பக்கங்கள்

02 அக்டோபர் 2012

மீதமுள்ள புலிகளை அழிக்க ஒத்துழைப்பு கோருகிறார் கோத்தபாய!

நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் எஞ்சிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை சீர் குலைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாரியளவிலான மனித உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகரின் தூய்மை தொடர்பில் வெளிநாடுகள் புகழாரம் சூட்டுவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.