பக்கங்கள்

18 டிசம்பர் 2012

முன்னாள் புலிகள் இன்னாள் EPDPயானாலும் கோத்தபாயவின் புனர்வாழ்வு வலையத்துள்!

விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இவர்களுள் அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்கனில் இணைந்தவர்களென பலரும் அடங்கியுள்ளமை அவ் உறுப்பினர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. யாழ்.குடநாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய போராளிகள் கடந்த சில தினங்களாக முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது தற்போதைய வாழ்க்கை பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் விரல் அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்னராக விடுதலைப் புலிகளது ஆதரவாளர்கள் மற்றும் போராளிகளில் ஒரு சிலர் இவ்வாறு அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியிலும் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்களிலும் இணைந்தும் பணியாற்றிவருகின்றனர். அவ்வாறானவர்களே தற்போது புதிய விசாரணை வளையத்தினுள் வந்துள்ளனர். எங்களைப்போன்றே அவர்களுக்கும் கவனிப்புக்கள் இருந்தன என்கின்றனர் போராளிகளில் ஒரு பிரிவினர். இதனிடையே குடாநாட்டின் பல இடங்களிலும் இவ்வாறு முன்னாள் போராளிகள் விசாரணைக்கென அழைக்கப்படுவது தொடரும் அதே வேளை சிலர் கடத்தப்பட்டு வருவது தொடர்பாகவும தகவல்கள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. எனினும் கடத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேரென்பது பற்றியோ அவர்களுள் எவ்வளவு பேர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது பற்றியோ தகவல்கள் இது வரை வெளியாகியிருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.